ரஜினியும், சிரஞ்சீவியும் நல்ல நண்பர்கள். ஆரம்பகாலத்தில் இருவரும் இணைந்தும் நடித்துள்ளனர். கபாலி வெளியானதும், சிரஞ்சீவி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஹைதராபாத்தில் அவருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. பிறகு சில தினங்கள் கழித்து மீண்டும் கபாலி பார்த்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், ரஜினியை இப்படியொரு கேரக்டரில் பார்க்க ஆச்சரியமாக இருக்கு. 25 வருடங்கள் கழித்து மனைவியை அவர் பார்க்கும் போது அவரது நடிப்பு இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிக்குது, மீண்டும் கபாலி பார்ப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.