இதைத்தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க, முழு உரிமையை ரசிகர் மன்ற நிர்வாகி சுதகரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் சுதாகர் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் அவருங்காலத்தில் ரசிகர்கள் எவ்வித தொடபையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது. அதேபோல் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, என உத்தரவிட்டுள்ளார்.