ராஜேஷ்குமாரின் கதை வசனத்தில் 2 ஆயிரம் சதுர அடியில் சொர்க்கம்

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (15:55 IST)
சண்டமாருதம் படத்தின் வசனத்தை எழுதிய க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் அடுத்து 2 ஆயிரம் சதுர அடியில் சொர்க்கம் என்ற படத்தின் கதை வசனத்தை எழுதுகிறார்.
 
காமெடிக்கு முக்கியத்துவம் தந்து தயாராகும் இந்தப் படத்தில் நந்தா நாயகனாக நடிக்கிறார். அருண் விஜய் போன்று ஒரு பிரேக்கிற்கு தவித்துக் கொண்டிருக்கும் நந்தா இந்தப் படம் தனக்கு திருப்புமனையாக அமையும் என்று நம்புகிறார்.
 
அதற்காக நகைச்சுவை நடிப்பை இப்போதே பயிற்சி செய்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்