‘ராஜாவுக்கு செக்’ ! சேரனின் இன்னொரு படமும் ரெடி

வெள்ளி, 25 ஜனவரி 2019 (12:11 IST)
இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.  ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துள்ள சேரன், இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார் 


 
ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் .இப்படத்தில்
சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே மற்றும் இர்பான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 
 
இந்தப் படம் குறித்து இயக்குநர் சாய் ராஜ்குமார் கூறுகையில்,
 
‘ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்.


 
இந்தப் படத்தில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’, இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரை சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ’திருமணம்’ படத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தார்.
 
அந்த நேரத்தில் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுக்கு ஒரு கெட்டப் சேஞ்ச் மாற்ற வேண்டியிருந்தது. அதைக் கணக்கிட்டு, அவர் திருமணம் படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். 
 
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவுபெற்று இன்னும் சில நாட்களில் முதல் காப்பி கைக்கு வந்துவிடும். சென்சார் சான்றிதழ் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களுக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும்” என்றார் இயக்குநர் ராஜ்குமார்.
 
மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.


 
இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். 
 
தெலுங்கில் பிரபலமாக உள்ள வினோத் யஜமானியா இசையமைப்பாளர். இப் படத்தின் மூலம் தமிழுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்