காஞ்சனா 2 படத்துக்குப் பின், ஒரு டிக்கெட்ல ரெண்டு படம் என்ற படத்தைதான் லாரன்ஸ் இயக்கி நடிப்பதாக இருந்தது. படத்தின் பெயரைப் போல இந்தப் படத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு கதைகள் இடம்பெறும். அதாவது ஒரு படத்தில் இரண்டு கதைகள். இதில் ஒரு கதையில் நாயகியாக லட்சுமி ராய் நடிப்பதாகவும் முடிவாகியிருந்தது.
இந்நிலையில், காஞ்சனா 2 மிகப்பெரிய வெற்றியை பெறவே, வேந்தர் மூவிஸ் லாரன்ஸை வைத்து ஒரு படம் தயாரிக்க முன்வந்தது. இயக்கம் நடிப்பு எல்லாம் லாரன்ஸ்.