தெலுங்கில் அவர் கடைசியாக இயக்கிய ரிபெல் படுதோல்வியடைந்தது. அந்த தோல்வியை முன்னிட்டு தெலுங்குப் பட உலகமே அவருக்கு எதிராக திரும்பியது. பட்ஜெட்டைவிட அதிகம் செலவளித்தார் என்ற ரிபெல் தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு செவிகொடுத்த தெலுங்கு திரையுலகம், லாரன்ஸ் சில கோடிகள் தயாரிப்பாளருக்கு தர வேண்டும் என உத்தரவு போட்டது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து வேந்தர் மூவிஸுக்கு ஒரு படம் இயக்கி நடித்துத் தருகிறார் லாரன்ஸ். தெலுங்கு ஆஃபர்களை ஒதுக்கி வைத்து இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டுள்ளார். தமிழில் தயாராகும் இந்தப் படத்தை தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.