கண்ணீர் விட்ட ராதிகா: வைரலாக பரவும் புகைப்படம்!

வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (15:18 IST)
சமீபத்தில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமணம் மாமல்லபுரத்தில் நடந்தது. கிரிக்கெட் வீரர் மிதுனை ரேயான் மணந்தார். திரையுலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.


 
 
தனது மகளின் திருமணத்தின் போது ராதிகா அழுத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. மகளின் திருமணத்தின் போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 
இந்த புகைப்படத்தை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நான் ஏதும் சொல்ல தேவையில்லை, இந்த புகைப்படமே சொல்லும் என அவர் அதில் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்