ராதாமோகன் ஒருவர்தான் இப்போது தமிழில் பீல்குட் திரைப்படங்களை எடுக்கிறார். அவரது கடைசி படங்கள் கௌரவம், உப்பு கருவாடு இரண்டும் குட் என்று பெயர் வாங்கினாலும் பீல் குறைவாகவே இருந்தது. புதிதாக அவர் தொடங்கியிருக்கும் படம், பிருந்தாவனம்.
வித்தியாசமான காதல் கதையான இதன் கதை, திரைக்கதையை ராதாமோகன் எழுத, பொன்.பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசை, தயாரிப்பு ஷான் சுந்தர்.