2015 -இல் சோலோ ஹீரோவாகும் த்ரிஷாவின் முன்னாள் காதலர்

செவ்வாய், 11 நவம்பர் 2014 (10:06 IST)
காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட த்ரிஷாவும், ராணாவும் பிரிந்துவிட்டனர் என்பது சமீபத்திய செய்தி. சரி, நமது விஷயத்துக்கு வருவோம்.
ஆரம்பம் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த ராணா 2015 மார்ச்சில் தனி ஹீரோவாக தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். ஆனால் இயக்குனர் யார் என்ற விவரத்தை அவர் கூறவில்லை.
 
தெலுங்கில் தயாராகும் இரண்டு சரித்திரப் படங்கள் - ருத்ரம்மாதேவி, பாகுபலி - இரண்டிலும் ராணா நடித்து வருகிறார். இந்தியில் அக்ஷய் குமாருடன் ஒரு படம். தவிர த்ரிஷாவுக்கு முன்பு ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்ட பிபாசா பாசுவுடனும் ஒரு படத்தில் நடிக்க ராணா கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்