இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், போராட்டத்தை மதித்து அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறையில் ஈடுபடுவது மிகவும் கேவலமான செயல் என தெரிவித்துள்ளார்.
மேலும், நமது போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. எல்லோரும் வீட்டுக்கு திரும்புங்கள் என பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால், பாலாஜியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.