அல்லு அர்ஜுனின் புஷ்பா படப்பிடிப்பு நிறுத்தம்!

சனி, 11 செப்டம்பர் 2021 (16:38 IST)
புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மழையால் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு கிழக்கு கோதாவரி ஆற்றின் கரையில் இருக்கும் மரேடு மல்லி வனப்பகுதிகளில் நடந்து வருகிறது. அந்த பகுதியில் இப்போது தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு காக்கி நாடாவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்