ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் தயாரான படம் மெல்லிசை. படம் தயாராகி பல மாதங்களாகியும் திரைக்கு வராமல் உள்ளது. தற்போது ஜே.எஸ்.கே. நிறுவனம் இந்தப் படத்தின் விநியோக உரிமையை வாங்கியதைத் தொடர்ந்து படவெளியீட்டுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். முதல்கட்டமாக படத்தின் பெயரை மெல்லிசை என்று மாற்றியுள்ளனர்.
ஒரு படம் நீண்டநாள் தயாரிப்பில் இருந்தால், அதன் பழமையை மறைக்க இப்படி பெயரை மாற்றுவதுண்டு. மேலும், மெல்லிசை என்பதில் அழுத்தம் இல்லை என்று புரியாத புதிர் என்று பெயரை மாற்றியுள்ளனர்.