நாகேந்திரன் இயக்கியிருக்கும், காவல் படத்தில் - நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின் புதிய பெயர்தான் காவல் - விமல் ஜோடியாக கீதா நடித்துள்ளார். படம் வெளியாகும் நிலையில் கேரளாவில் அவருக்கு ஏற்பட்ட த்ரில் அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவின் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது நடுவில் ஒரு பாம்பும் படமெடுத்திருக்கிறது. உடனே சட்டென்று அதனை கையில் பிடித்திருக்கிறார் கீதா. பாம்பென்றால் படையும் நடுங்கும். படப்பிடிப்பு குழுவும் நடுங்க, கீதா மட்டும் தில்லாக பாம்பை கையில் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் தந்திருக்கிறார்.