புலிக்கு படையெடுக்கும் பள்ளிக் குழந்தைகள்

வியாழன், 8 அக்டோபர் 2015 (13:15 IST)
புலி படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.


 

 
சிலர் படத்தை அதீதமாக விமர்சித்துக் கொண்டிருக்க, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, திரைக்கதை பலவீனமாக இருந்தாலும் ஒருமுறை பார்க்கக் கூடிய படம்தான். சிம்புதேவன் தமிழில் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்திருக்கிறார் என பாராட்டவும் செய்கின்றனர்.
 
புலி குழந்தைகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படம். அந்தவகையில் படம் தனது குறிக்கோளை அடைந்துவிட்டது என்று சொல்லலாம்.
 
தமிழகத்தின் பல பகுதிகளில், பள்ளி நிர்வாகமே குழந்தைகளை புலி படத்துக்கு அழைத்து சென்றுள்ளது. சென்னையிலும் பள்ளிக்குழந்தைகளை புலி படத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
முதலாவதாக, இயக்குனர் லாரன்ஸ் தனது ட்ரஸ்டில் படிக்கும் குழந்தைகளை புலி படத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறார். இந்த புதிய முயற்சி புலியை பெருமளவு காப்பாற்றும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்