புலியை கலாய்த்தால் போலிசைக் கூப்பிடுவோம் : தயாரிப்பாளர்கள் முடிவு

சனி, 10 அக்டோபர் 2015 (14:12 IST)
புலி படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டலடிப்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அப்படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 
நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் புலி. இந்தப் படத்தைப் பற்றி கிண்டலடித்து நிறைய மீம்ஸ்கள் சமூகவலைத் தளங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
 
இது படத்தின் வசூலைப் பாதிக்கிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பு கருதுகிறதாம். சமீபத்தில் இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ் வெளியிட்ட ஒருவரின் பேஸ்புக் முடக்கப் பட்டிருக்கிறது. இதற்கு பின்னனியில் தயாரிப்பாளர் தரப்பு இருப்பதாகத் தெரிகிறது.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் புலி படத்தைப் பற்றி, கடுமையாக கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிடுவோருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்