சுயசரிதை எழுதி முடித்த உலக அழகி நடிகை! ரசிகர்களிடம் தெரிவித்து மகிழ்ச்சி!

புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:22 IST)
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா தனது வாழக்கை சரிதமான அன்பினிஷ்டு என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார்.

இந்தியாவின் கடைசி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து அவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பாலிவுட்டில் நுழைந்த அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்போது  பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து 38 வயதாகு பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை வரலாற்று புத்தகமான அன்பினிஷ்டு என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட அவர் ‘இதை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். பதிப்பாளர்களிடம் கொடுப்பதற்கான கடைசி வடிவம் தயாராக உள்ளது. ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் உள்ள சுயபரிசோதனை மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்