ஆர்.கே.செல்வமணியையும், விஜயகாந்தையும் ஒருசேர உயர்த்திய படம், புலன் விசாரணை. ஆட்டோ சங்கர் கதையையும், உடல் உறுப்புகளை திருடுவதையும் புத்திசாலித்தனமாக இணைத்து செல்வமணி உருவாக்கிய இந்தப் டத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
பெட்ரோலியத்தை கண்டுபிடிப்பதில் நடக்கும் குற்றத்தை மையப்படுத்தி புலன் விசாரணை இரண்டாம் பாகத்தை செல்வமணி எடுத்து வருகிறார். மாலத்தீவு, கொச்சி, மும்பை, கொல்கத்தா, மிஜோராம், ஒரிசா, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.