பிரகாஷ்ராஜ் ஒரு படத்தில் கமிட்டானால் அந்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கிரகம் பிடித்தது என்று அர்த்தம். ஒன்பது மணி படப்பிடிப்புக்கு பன்னிரெண்டு மணிக்கு வந்து நிற்பார். கமலுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் நடித்த போது, பிரகாஷ்ராஜுக்காக கமல் உள்பட யூனிட்டே காத்திருக்கும்.
மேற்படி படத்தில் குறிப்பிட்ட வேடம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் நடித்தால் நல்லது என்று அனைவரும் விரும்பியுள்ளனர். ஹீரோ ராம் சரண் தேஜாவின் தந்தை சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் எண்ணமும் அதுதான். வம்சியை அழைத்த அவர், நீங்க சிறந்த இயக்குனர். பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர். நீங்கள் பிரிந்திருப்பது சினிமாவுக்குதான் இழப்பு என்று பேச, அனைத்தையும்விட சினிமாதான் எனக்கு முக்கியம் என்று வம்சியும், பிரகாஷ்ராஜுடன் பேச வேண்டும் என்று அவரது மேனேஜருக்கு தகவல் சொல்ல, பிரகாஷ்ராஜே வம்சியை தேடி வந்துவிட்டார்.