இன்னொரு காரணம், களவாடிய பொழுதுகள். பிரபுதேவா, பூமிகா நடித்த இந்தப் படம் தயாராகி பல வருடங்கள் ஆனபிறகும் இன்னும் திரைக்கு வராமலே உள்ளது. இதன் பிறகு ஏபிசிடி இந்திப் படத்தில் நடித்தார் பிரபுதேவா. இப்போது அதன் சீக்வெலில் சின்ன வேடத்தில் நடிக்கயிருப்பதாக தகவல்.
இந்தியில் சிங் இஸ் பிளிங் படத்தை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கும் நடனப்புயலுக்கு ஆந்திராவிலிருந்து ஒரு தொழில்வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கு இயக்குனர் விஜய் மடலா வைத்திருக்கும் ரோடு மூவி கதைக்கு பிரபுதேவா ஆப்டாக இருப்பார் என கருதுகிறார். பிரபுதேவா சம்மதித்தால் படத்தை தமிழ், தெலுங்கில் எடுக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.