பொன்னியின் செல்வன் திரைப்படம் செகண்ட் பார்ட் ரிலீஸ் எப்போது?

ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:06 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மறைந்த எழுத்தாளர் கல்கி 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து படக்குழு இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று படக்குழுவினருடன் இயக்குனர் மணிரத்னம்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது திட்டமிடப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் “இன்னும் 6 முதல் 9 மாதங்களில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்