ரொம்ப நாள் கழிச்சு படம் பாக்க வந்தவங்களுக்கு நன்றி… பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் விக்ரம்!

சனி, 5 நவம்பர் 2022 (18:09 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்போது வரை படம் சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு தனித்தனியாக விருந்து அளித்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். பெரும்பாலானவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் உள்ளிட்ட முக்கியக் கலைஞர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட விக்ரம் ‘இந்த படத்தை நீண்ட நாட்களாக திரையரங்குக்கு வராத மக்கள் வந்து பலர் கண்டு ரசித்தனர். அவர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்