பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு… மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:06 IST)
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

பிப்ரவரி மாத இறுதிக்குள்  இரண்டு பாகங்களாக உருவாகி படத்தின் முதல் பாகத்துக்கான காட்சிகள் எல்லாம் படம்பிடிக்கப்பட்டு விடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் காட்சிகளுக்கான கிராபிக்ஸ் வேலைகள் நடந்து படம் ரிலீஸான பின்னர் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்