பொன்னியின் செல்வன் First Single ரிலீஸ்! எல்லாரும் வாங்க..! – இடத்தை சொன்ன கார்த்தி!

ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:09 IST)
விரைவில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழாவிற்கு பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அரச காலத்து படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிளான பொன்னி நதி என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, இன்று மாலை ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, பாடியும் உள்ள “பொன்னி நதி” பாடல் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்