தவறை சுட்டிக்காட்டும் சிநேகன்: கதறி அழும் மும்தாஜ்

புதன், 12 செப்டம்பர் 2018 (15:16 IST)
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 100 நாட்கள் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்னும் எந்த டாஸ்கும்  கொடுக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் வந்துள்ளது இருப்பவர்களுக்கு தலைவலியாக உள்ளது.
இந்நிலையில் இவர்கள் ஒரு வார காலம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளனர். இவர்கள் வந்த முதல் நாளே வீட்டில் எல்லாரும் சமம் தான் என்று கூறி  மும்தாஜுக்கு வைக்கப்பட்ட ஸ்பெஷல் பால், தயிர், போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். ஆனால் இவர்கள் இவ்வாறு செய்ததை மும்தாஜ் கண்டுகொள்ள  வில்லை.
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நான் எல்லாருக்கும் பொதுவாக சொன்னதை உங்களுக்குன் எடுத்து கொண்டால்...எல்லாரும் சில இடங்களில் தப்பு பண்ணும்போது நீங்க ஸ்ட்ராங்கா இருங்க என்று சிநேகன் கூற, அதற்கு மும்தாஜ் எல்லாருக்கும் மேனர்ஸ் இல்ல மேனர்ஸ் இல்ல சொல்லும் நான் தப்பு பண்ணிட்டேனா? என்று  தான் கூறி கதறி அழுகிறார். பின் தேம்பி தேம்பி அழும் மும்தாஜை ஆசுவாசப்படுத்தி தேற்றுகிறார் சிநேகன் மற்றும் மற்ற  போட்டியாளர்கள். 
 
பிக்பாஸ் 1 சீசனில் கட்டிபிடித்து ஆறுதல் கூறும் சிநேகன், இந்த முறை மும்தாஜ் தோல் மீது கையை போட்டு நாசுக்காக, அவரை சமாதானப்படுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்