ஐயப்பனின் மகிமையைச் சொல்லும் இந்தப் படத்தில் சரவணனும், அர்ச்சனா சிங்கும் கணவன், மனைவியாக வருகிறார்கள். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட, அவர்களின் மகன் கன்னிச்சாமியாக சபரிமலை சென்று ஐயப்பன் அருளில் பிரிந்த அப்பா, அம்மாவை ஒன்று சேர்ப்பதுதான் கதை.