தயாரிப்பாளர் இல்லாததால் தாமதமாகும் பார்த்திபன் கனவு

வியாழன், 2 ஜூலை 2015 (13:22 IST)
புதிய பாதை, ஹவுஸ்ஃபுல் படங்களுக்குப் பிறகு பார்த்திபனுக்கு பாராட்டு கிடைத்த படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தின் அடுத்த பாகமாக, கதை இருக்கு என்ற பெயரில் ஒரு ஸ்கிரிப்டை பார்த்திபன் தயார் செய்தார். எப்போதோ படப்பிடிப்புக்கு கிளம்பியிருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் இல்லாததால் கதை இருக்கு படமாவது தள்ளிப் போகிறது.
 
ஒரு இயக்குனர் தனது மகனை நாயகனாக்க என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான், கதை இருக்கு படத்தின் கதையாம். இதுவே பழைய பார்த்திபனாக இருந்தால் கடனை வாங்கி படத்தை தொடங்கியிருப்பார். இத்தனை வருட சினிமா அனுபவத்தில், படம் தயாரிக்கக் கூடாது, அதுவும் கடன் வாங்கி என்ற ஞானோதயம் இப்போதுதான் பார்த்திபனுக்கு கிடைத்திருக்கிறது. கதை இருக்கு தள்ளிப் போக இதுவும் காரணம்.
 
தயாரிப்பாளர் அமையும்வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என முடிந்தவரை படங்களில் நடிப்பது என முடிவெடுத்து, அதனை செயல்படுத்தி வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்