பார்த்திபனின் உப்புமா படம் பெயர் மாறியது

வியாழன், 13 நவம்பர் 2014 (14:55 IST)
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியால் உற்சாகம் பெற்ற பார்த்திபன், அதன் இரண்டாம் பாகமாக உப்புமா படம் என்ற படத்தை எடுக்கயிருப்பதாக அறிவித்திருந்தார்.
 
இப்போது அந்தப் படத்தின் பெயரை, கதை இருக்கு என்று மாற்றியுள்ளார்.
 
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை, இதில் கதையே இல்லை என்று அறிவித்து விளம்பரப்படுத்தினார். அதற்கேற்ப, சினிமாவுக்காக சில உதவி இயக்குனர்கள் கதை விவாதம் செய்வது படத்தின் கதையாக இருந்தது.
 
கதை இருக்கு படத்தில் எழுதிய கதையை படமாக்க படும் அவஸ்தைகளை கூறவிருக்கிறாராம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இரண்டாம் பாகமாக இதனை சொல்லலாம். அதில் நடித்தவர்களும் நடிக்கக்கூடும் என்று பட்டும் படாமல் தான் எடுக்கும் படம் போலவே குழப்பமாக தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

வெப்துனியாவைப் படிக்கவும்