சிங்காரவேலனுக்கு எதிராக கமிஷனரிடம் புகார் மனு

புதன், 2 செப்டம்பர் 2015 (16:11 IST)
லிங்கா புகழ் விநியோகஸ்தர் சிங்காரவேலனுக்கு எதிராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணை தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன், கே.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கூட்டாகச் சென்று கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.


 


பிறகு, அது குறித்து வேந்தர் மூவிஸ் மதன் பேட்டியளித்தார்.
 
"நடிகர் விஷால் நடித்த ‘பாயும் புலி’ படம் வருகிற 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில், திருச்சி பகுதி சினிமா வினியோகஸ்தர் சிங்காரவேலன், ‘பாயும் புலி’ படத்தை திரையிட விடமாட்டேன் என்று மிரட்டி வருகிறார். தியேட்டர் அதிபர்களையும் மிரட்டி உள்ளார். ரூ.50 லட்சம் பணம் கேட்கிறார். 
 
பணத்தை கொடுக்காவிட்டால், படத்தை திரையிட விடமாட்டேன் என்று சொல்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ‘பாயும் புலி’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். உடனே உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்." - இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்