சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரின் மகன் குடிபோதையில் காரை ஒட்டி ஒரு ஆட்டோ டிரைவரை கொலை செய்தார்.அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஒரே மகள், 7 வயது மயிஷா.
மயிஷாவின் தாய் ஏற்கனவே இறந்த நிலையில், தந்தையையும் பலி கொடுத்து ஆதரவற்ற நிலைக்கு மயிஷா தள்ளப்பட்டார். அவரது நிலையை அறிந்த விஷால், மயிஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு அவளது கல்விச் செலவை தனது தேவி அறக்கட்டளை ஏற்கும் என்று உறுதியளித்தார்.