ஒரு படத்தை விமர்சிக்கிற தகுதி பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆனால், சோஷியல் மீடியாவில் மவுசை நகர்த்த தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதுகிறார்கள். இதை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தடுக்க வேண்டும். விமர்சனம் எழுதுகிற தகுதியும் உரிமையும் உங்களுக்குதான் உண்டு என்றார்.
ஆனால், மணிரத்னமோ, முன்பு டீக்கடையில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். நானும், பி.சி.ஸ்ரீராமும்கூட குட்டிச் சுவரில் உட்கார்ந்து, யாருக்குமே படம் எடுக்க தெரியலை என்று விமர்சித்திருக்கிறோம். இப்போது ஜனங்களுக்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் தங்களின் கருத்தை கூறுகிறார்கள். அதை தடுக்க முடியாது என்றார்.