30 நாட்கள் தான் பாக்கி – கெளதம் மேனன்

செவ்வாய், 18 ஜூலை 2017 (15:41 IST)
கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு, 30 நாட்களே பாக்கியிருப்பதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.


 

 
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ரா.பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நியூயார்க், குன்னூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் லேட்டஸ்ட் ஷெட்யூல், ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்கெட்ச்’ படம் முடியும் நிலையில் இருப்பதால், இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, “இன்னும் 30 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியிருக்கிறது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.

வெப்துனியாவைப் படிக்கவும்