மீண்டும் கதாநாயகன் - சந்தானமே கூறிய தகவல்

வெள்ளி, 23 ஜனவரி 2015 (10:25 IST)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக நடித்து டின் கட்டிக் கொண்ட பின்பும் சந்தானத்தின் ஹீரோ ஆசை அடங்கவில்லை. சாகா வரம்பெற்ற அந்த ஆசைக்கு தீனி போட தயாராகிவிட்டார்.


 
சிம்புவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் 200 படங்களில் நடித்துவிட்டார் சந்தானம். தற்போது ஐந்து படங்கள் அவர் கைவசம் உள்ளன. அதில் ஒன்றில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.
 
கடந்த புதன் கிழமை சந்தானத்தின் பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை வந்தவர் சாமி கும்பிட்டு, ஆட்டோவில் கிரிவலம் சென்றார். வாகனத்தில் பலரும் கிரிவலம் சென்றாலும் சந்தானத்தின் ஆட்டோ சவாரிக்குப் பிறகு, ஆட்டோவில் கிரிவலம் போகலாமா? அப்படிப் போனால் பலன் குறையாமல் கிடைக்குமா என்ற புதிய கேள்வி திருவண்ணாமலையில் எழுந்துள்ளது. 
 
ஆன்மீகவாதிகள் விளக்கலாமே.

வெப்துனியாவைப் படிக்கவும்