கடந்த புதன் கிழமை சந்தானத்தின் பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை வந்தவர் சாமி கும்பிட்டு, ஆட்டோவில் கிரிவலம் சென்றார். வாகனத்தில் பலரும் கிரிவலம் சென்றாலும் சந்தானத்தின் ஆட்டோ சவாரிக்குப் பிறகு, ஆட்டோவில் கிரிவலம் போகலாமா? அப்படிப் போனால் பலன் குறையாமல் கிடைக்குமா என்ற புதிய கேள்வி திருவண்ணாமலையில் எழுந்துள்ளது.