செம்மர கடத்தல் - நடிகை கைது

திங்கள், 27 ஏப்ரல் 2015 (09:15 IST)
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலியும் அவரது சகோதரர் பாபாவலியும் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மஸ்தான் வலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் நடிகை நீது அகர்வால். இவர்கள் மூவர் மீதும் செம்மர கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
 
செம்மர கடத்தல்காரர்களுக்கு நீது அகர்வால் பெருந்தொகை வங்கி மூலமாக அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக போலீசார்  நீது அகர்வாலை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்