ஈஸ்வரன் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்: பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகிறார்!

சனி, 30 ஜனவரி 2021 (21:42 IST)
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தமிழில் அறிமுகமாகும் ஒரு நடிகையின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது வெகு அரிதாக நடக்கும் நிலையில் நிதி அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஈஸ்வரன், பூமி, ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருக்கு மிகப் பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது 
 
தெலுங்கின் பிரபல நடிகரான பவன்கல்யாண் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பவன் கல்யாணின் 27 வது படத்தை டைரக்டர் இயக்குநர் கிரிஷ் இயக்க இருப்பதாகவும் ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பை அடுத்து நிதி அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்