ரிலீஸிற்கு முன்பே அங்கு மட்டும் திரையிடப்படும் நேர்கொண்ட பார்வை - கொந்தளித்த அஜித் ரசிகர்கள்!

வெள்ளி, 28 ஜூன் 2019 (16:56 IST)
தமிழ் சினிமாவின் தலையாய  நடிகர் அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்து ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 
 

 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் வருகிற ஆக்ஸ்ட் 1ம் தேதி என்று கூறப்பட்டுள்ள நிலையில்,  ரிலிஸிற்கு முன்பே போனிகபூர் நேர்கொண்ட பார்வை படத்தை மும்பையில் ஒரு ப்ரீமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்துள்ளாராம். மேலும் இதில் அவருடைய குடும்பத்தினர் கலந்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. இதனை அறிந்த தமிழ்நாட்டு தல ரசிகர்கள் சற்று கடுப்பாகியுள்ளனர்.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்