நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறாரா?

வியாழன், 13 அக்டோபர் 2022 (11:00 IST)
நடிகை நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த வாடகை தாய் துபாயில் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்திய சட்டப்படி திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை இருக்கும் நிலையில் திருமணமான 4 மாதத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் நயன்தாராவின் அண்ணன் துபாயில் இருப்பதால் அங்குதான் அவர் குழந்தை பெற்றெடுத்த வாடகைத் தாயும் இருக்கிறார் என்றும் இவர்கள் மூலம்தான் வாடகைத்தாய் குழந்தை ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. நயன்தாராவின் வாடகை தாய் துபாயில் இருந்தால் இந்திய சட்டம் அதற்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டு வருகிறது
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்