யுவர் ஆனர்... நயன்தாரா நடிக்க வரலை - டிஆர் புகார்

செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (14:34 IST)
இது நம்ம ஆளு படத்தை முடித்துக் கொடுக்க நயன்தாரா மறுக்கிறார் என நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறார் சிம்புவின் தந்தை டி.ஆர்.


 

 
பாண்டிராஜ் இது நம்ம ஆளு படத்தை தொடங்கும் போதே இதுபோன்ற வில்லத்தனங்கள் நடக்கும் என்று தெரியும். ஜோ‌சியம் எல்லாம் இல்லை. சிம்பு நடிக்கிறார் என்றால் வம்பு கன்பார்ம்தானே. பத்தாததுக்கு படத்துக்கு இசை சிம்புவின் தம்பி குறளரசன். 

படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பின் சிம்பு, குறளரசன், டிஆர் என குடும்பமாக இணைந்து நயன்தாரவுடன் ஒரு குத்துப் பாடலுக்கு ஆட விரும்பியிருக்கிறார்கள். நயன்தாராவும் கால்ஷீட் தந்திருக்கிறார். ஆள் வந்து என்ன பயன்? டியூன் வரவேண்டுமே.
 
இப்போது டியூன் ரெடி. நயன்தாரா வர மறுக்கிறார். கேட்ட போதெல்லாம் போய் நடித்துவிட்டேன். அதற்குப் பிறகு தந்த கால்ஷீட்டையும் வீணாக்கிவிட்டார்கள்.
 
இனி நடிக்க முடியாது. முடிந்தால் பாக்கி சம்பளத்தை வாங்கித் தாருங்கள் என பஞ்சாயத்து பேச வந்தவர்களிடம் கறhராக கூறிவிட்டார் நயன்தாரா.
 
சந்தேகமென்ன... நியாயமும் நாமும் நயன்தாரா பக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்