தெலுங்கு சினிமாவை அதிர விட்ட நயன்தாரா

வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (15:28 IST)
தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா படங்களில் நடிக்க அதிக அளவில் சம்பளம் கேட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் உள்ளது. தற்போது மலையாளத்திலும் கவணம் செலுத்தி வருகிறார்.
 
இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக அவர் ரூ.6 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இது தெலுங்கு சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்