மௌனம்தான் என்னுடைய கௌரவம்

புதன், 20 ஆகஸ்ட் 2014 (10:03 IST)
நயன்தாரா, ஹன்சிகா உடனான காதல் தோல்விகள் குறித்து சமீபத்தில் கருத்து தொரிவித்த சிம்பு, முதல் முறை கத்தியால் குத்துப்படும் போதுதான் தாங்க முடியாது. இரண்டாவது முறை பழகிவிடும் என்றார்.

சிம்புவுடனான காதல் தோல்வி குறித்து ஹன்சிகா என்ன சொல்கிறார்?

அதுபற்றி சொல்ல எனக்கு எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதுதான் என்னுடைய கௌரவம். நான் கௌரவமான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன்.

அது பற்றி (காதல் தோல்வி குறித்து) பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் இரண்டு வார்த்தை சொல்ல நான் இரண்டு வார்த்தை சொல்ல, கடைசியில் நான்தான் காயப்படுவேன். நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. ஒரு நபராவது அதுபற்றி பேசாமல் இருந்தால் காயப்படுவதற்கான வழியில்லை.

பத்து வருடங்கள் கழிந்தாலும் அப்போதும் இந்த விஷயத்தில் என்னுடைய பதில் மௌனமாகவே இருக்கும் என பிரபல ஆங்கில நாளிதழுக்கு ஹன்சிகா பேட்டியளித்துள்ளார்.

23 வயதாகும் ஹன்சிகாவின் காதல் தோல்வி குறித்த விளக்கம் 63 வயது அனுபவத்தையும் தாண்டியது. கீப் இட்.

வெப்துனியாவைப் படிக்கவும்