சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி: நடிகை நவ்யா நாயர் எதிர்ப்பு

புதன், 3 அக்டோபர் 2018 (08:04 IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் “வழிபாடு என்பது ஆண்கள், பெண்களுக்கான அடிப்படை உரிமை. மாதவிடாய் காரணங்களை வைத்து பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது. அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபட சம உரிமை கொண்டவர்கள்” என்று உத்தரவிட்டனர். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.

நடிகை நவ்யா நாயர் பெண்கள் சபரிமலை செல்வதை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.  அவர் கூறும்போது, “நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். ஆனாலும் சபரிமலை கோவிலுக்கு குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் செல்ல கூடாது என்று நடைமுறையில் சில வழக்கம் இருக்கிறது. அந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பது எனது கருத்து” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்