கேரளாவில் உள்ள ஹோட்டலுக்கு வந்த ஊர்வசி அங்கிருந்து முழுப் போதையில் கிளம்பியிருக்கிறார். அப்போது அவருக்கும் வேறு ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஊர்வசியை சமாதானப்படுத்தி காரில் அனுப்பி வைக்க அங்கிருந்தவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் ஊர்வசியோ, அந்தாளுக்கு ஒரு மரியாத வேணும் என்று சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார்.