நண்பேன்டா.... நட்புக்காக கௌரவ வேடத்தில் தோன்றும் சந்தானம்

வெள்ளி, 29 ஜூலை 2016 (13:08 IST)
கதை தேவையில்லை சந்தானம் இருந்தால் போதும் என்று படம் எடுத்துக் கொண்டிருந்தவர் ராஜேஷ் எம். சிவா மனசுல சக்தி முதல் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்கவரை சந்தானம்தான் இவர் படங்களில் சென்டர் ஆஃப் அட்ராக்சன். 


 

 
நாயகனாக நடிப்பதால் இனி காமெடியானாக நடிப்பதில்லை என்று சந்தானம் அறிவித்ததில் அதிகம் நொறுங்கிப் போனவர் ராஜேஷ். அவர் ஜீ.வி.பிரகாஷை வைத்து இயக்கும் கடவுள் இருக்கிறான் குமாரு படத்தில் சந்தானம் இல்லை. 
 
ராஜேஷ் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, கௌரவ வேடத்தில் கடவுள் இருக்கிறான் குமாரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம்.
 
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ... நட்பு இருக்குது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்