தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது.
அகிலும், ஸ்ரேயாவும் காதலித்தனர். திருமண ஏற்பாட்டின் போது இருவீட்டார் இடையே ஏற்பட்ட பிரச்சனையும், அவர்களுக்கிடையில் இருந்த கருத்து வேறுபாடுகளால் காதல் முறிந்துவிட்டதாம். இதுவே திருமணம் நிற்க காரணம் என கூறப்பட்டது.
இதனால், அகிலின் சினிமா வாழ்க்கை ஒரு புறம் மோசமாக இருக்கும் நிலையில் அவரின் திருமணமும் நின்றுள்ளதை அடுத்து நாகர்ஜுனா, அமலா தம்பதியினர் கவலையில் உள்ளனர்.