நேற்று மதியம் 12 மணி அளவில் இளையராஜாவை டிஸ்சார்ஜ் செய்தனர். இரண்டு மூன்று தினங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர் மருத்துவர்கள். ஆனால், காரில் திரும்பும்போதே தனது உதவியாளர்களுக்கு போன் செய்த இளையராஜா, இரண்டு மணி நேரத்தில் ரிக்கார்ட்டிங்குக்காக அனைவரையும் பிரசாந்துக்கு வரச்சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி இரண்டு மணி நேரத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் தனது ரிக்கார்டிங் பணியை இளையராஜா தொடங்கினார்.