இதனை தொடர்ந்து இதற்கு பதில் அளித்த அவர், "இசைக்கு நாடு, நேரம் கிடையாது. எதுவுமே கிடையாது. இசை என்பது இசைதான். இசை எல்லைகளை கடந்தது. அதற்கு எல்லைகள் என்பதே கிடையாது" என்று கூறினார். ஆரம்ப காலத்தில் உங்களுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது, "இந்த கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கடிந்துக்கொண்ட இளையராஜா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.