பிரபலங்கள் பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை தொடங்கி எக்குதப்பாக அவர்கள் பெயரில் எழுதி, சம்பந்தப்பட்டவர்களை சுற்றலில்விடுவதை ஒரு கும்பல் சிரத்தையாக செய்து வருகிறது. நகைச்சுவை வேடங்களில் நடித்துவரும் மொட்டை ராஜேந்திரனையும் அவர்கள் விடவில்லை. அவரது பெயரில் ட்விட்டர் கணக்கை தொடங்கி இஷ்டத்துக்கு எழுதி வருகின்றனர்.
ஒவ்வொருமுறையும், ஐயோ... அது நானில்லை, போலி என்று மறுத்து வந்தவர், வேறு வழியில்லாமல் காவல்துறை ஆணையர் அலவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார்.