இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படம்.. ஷூட்டிங் எப்போது?

செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:51 IST)
இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். இதை சிவா, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீரியஸ் படம் எடுக்கும் ராமும், இதுவரை நகைச்சுவையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவரான சிவாவும் இணைவது நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்