தனி ஒருவன் படத்தையடுத்து ஜெயம் ரவி ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சரித்திரப் படமான இது கடல்சார் கதையை கொண்டது என சில நாள்களாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மையா?
ஜெயம் ரவியிடம் கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை என்றார்.
சக்தி சௌந்தர்ராஜனின் மிருதன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அதையடுத்து பிரபு தேவா தயாரிப்பில் ரோமியோ ஜுலியட் லக்ஷ்மண் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதுதவிர வேறு எந்தப் படத்தையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை என்றார் ஜெயம் ரவி.
மேலும், புதிய படம் எதிலாவது ஒப்பந்தமானால், நானே அதனை அறிவிப்பேன் என்றார் அவர்.