மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தி சர்ச்சையை தவிர்த்த அஜித்

திங்கள், 12 அக்டோபர் 2015 (09:22 IST)
அஜித் படவிழாக்களுக்கு மட்டுமின்றி எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. முக்கியமானவர்களின் திருண நிகழ்ச்சியையும் அவர் தவிர்ப்பதுண்டு.


 

 
சமீபத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த அஜித் வரவில்லை. படவிழாக்களுக்குத்தான் வருவதில்லை, ஒரு திரையிசை மேதையின் இறுதிச் சடங்கில் கூடவா கலந்து கொள்ளக் கூடாது? அப்படியென்ன பெரிய கொள்கை என அஜித் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
 
மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் வருவாரா மாட்டாரா என்ற கேள்வி இருந்த நிலையில், தனது மனைவி ஷாலினியுடன் வந்து மனோரமாவின் உடலுக்கு அஜித் இறுதி அஞ்சலி செலுத்தி சர்ச்சையை தவிர்த்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்