திலீப் - மஞ்சு வாரியரின் திருமண பந்தத்தில் விரிசல் விழ ஆரம்பித்தபின் ஒரு வருட காலத்திற்கும் மேல் இருவரும் தனித்தனியாகதான் வாழ்ந்து வந்தனர். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற மஞ்சுவின் விருப்பமே அவர்களின் திருமண பந்தத்துக்கு கேடாக அமைந்தது என்று ஒருசாரர் கூறினர். ஆனால் திலீப் - காவ்யா மாதவன் இடையிலான நெருக்கமே இவர்களின் தாம்பத்தியத்துக்கு தடுமாற்றத்தை தந்தது. விரைவில் திலீப் காவ்யா மாதவனை திருமணம் செய்யப் போகிறார் என கொஞ்சம் பலமாகவே கேரளாவில் பேசப்படுகிறது.